பொலிஸ் மா அதிபருக்கு கொரோனா: பொலிஸ் தலைமையகத்தில் பல அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தகவல்
Prathees
2 years ago
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமசிங்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று பல பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.