ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

Prathees
2 years ago
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (05) கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு இந்த தீர்மானத்தை முன்வைத்தது.

இந்த பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானம் நிறைவேற்று மற்றும் மத்திய குழு கூட்டங்களில் அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். 

ஆளும் கட்சியும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளிகளும் இந்த செயலை விமர்சித்ததுடன், அரசுக்கு ஆதரவாக இருந்தாலும், நாட்டில் நிலவும் உண்மையான நெருக்கடியை மக்களுக்கு எடுத்துரைப்பதில் என்ன தவறு உள்ளதென அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினர்.