ஹிருணிகாவின் வீடு முற்றுகை: மூன்று குழந்தைகளுக்கும் சேதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை!

Mayoorikka
2 years ago
ஹிருணிகாவின் வீடு  முற்றுகை:  மூன்று குழந்தைகளுக்கும் சேதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை!

கொலன்னாவையில் உள்ள தனது வீட்டிற்கு முன்பாக சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இன்று காலை தாம் உட்பட பெண்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு எதிராகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தான் வீட்டில் தங்கவில்லை என்றும், தனது மூன்று குழந்தைகளும் வீட்டில் இருப்பதாகவும், அவர்களுக்கோ அல்லது அவர்களின் சொத்துக்களுக்கோ ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறுகிறார்.

அவ்வாறாயின் கருத்துச் சுதந்திரத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு அறிவிக்கப்படும் எனவும் அதற்கு ஜனாதிபதியும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவிக்கின்றார்.