மின் கட்டணம் அதிகரிப்பு: கோரிக்கை விடுத்த இலங்கை மின்சார சபை

Mayoorikka
2 years ago
மின் கட்டணம் அதிகரிப்பு: கோரிக்கை விடுத்த இலங்கை மின்சார சபை

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.