அதிக ரூபாயை தேடவேண்டிய நிர்பந்தத்தில் மாணவர்கள் – சாணக்கியன்

Mayoorikka
2 years ago
அதிக ரூபாயை தேடவேண்டிய நிர்பந்தத்தில் மாணவர்கள் – சாணக்கியன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் எதிர்வரும் 15 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

நீண்ட காலமாக ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துவந்த நிலையில் இச்சந்திப்பு உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று தெரிவித்தார்.

நாடாளுமன்றில் பேசிய அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் முன்வைக்கத் தவறினால், நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்றார்.

இதேவேளை ஏறக்குறைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விரைவில் குறைந்தது 20 சதவிகிதம் அதிகரிக்கப்படும் என்றும் இரா.சாணக்கியன் குறிப்பிட்டார்.

மேலும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு அவர்கள் தமது கல்விக் கட்டணத்தை டொலர்களில் செலுத்துவதற்கு அதிக ரூபாயைக் தேடவேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளதாக இரா.சாணக்கியன் தெரிவித்தார்