அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – பசில்

Prabha Praneetha
2 years ago
அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் – பசில்

ஷ்யா – உக்ரேன் போரினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரணம் வழங்க முயற்சித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொரோனா தொற்று, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என கூறினார்.

இருப்பினும் இதற்கான தீர்வை காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார

இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.