எரிபொருள் அதிகரிப்பு: ஸ்தம்பிக்கும் பேருந்து சேவை!

Mayoorikka
2 years ago
எரிபொருள் அதிகரிப்பு: ஸ்தம்பிக்கும் பேருந்து சேவை!

எரிபொருள் அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து சேவை இன்று பிற்பகல் வரை முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் மானியம் அல்லது கட்டண அதிகரிப்பே இன்றைய தேவை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து சேவைகள் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு தமது நிறைவேற்று சபை இன்று காலை கூடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.