விலையை உயர்த்த முடியாமல் பேக்கரி உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்
#SriLanka
#Food
#prices
Mugunthan Mugunthan
2 years ago
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், பேக்கரி தொழிலை நிலைநிறுத்துவதில் சிரமமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா மாத்திரமன்றி பேக்கரி கைத்தொழிலுக்கு தேவையான அனைத்து மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இந்நிலைமை சிறிய அளவிலான பேக்கரிகளுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்ட சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.