கடன் வாங்குவதற்கு முக்கிய நாடு ஒன்றிற்கு பயணமாகவுள்ள பசில் ராஜபக்ச!

Mayoorikka
2 years ago
கடன் வாங்குவதற்கு முக்கிய நாடு ஒன்றிற்கு பயணமாகவுள்ள பசில் ராஜபக்ச!

 நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலம் இன்றையதினம் (12) பதிவிட்ட டுவிட் பதிவிலேயே  மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நிதி அமைச்சர்   பசில் ராஜபக்ஷ அவர்களை அடுத்தவாரம் இந்தியாவிற்கு வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றோம். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடைமையை மேலும் வலுவாக்குவதற்கான தற்போதைய முயற்சிகளை அவரது விஜயம் வலுவூட்டும் என்பது குறிப்பிடத்தக்கது“ என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.