இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

Mayoorikka
2 years ago
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள  நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெயசங்கரை நேற்று இரவு சந்தித்தார். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார பங்காளித்துவம் தொடர்பில் பசில் ராஜபக்சவுடன் நிதி அமைச்சர் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இலங்கை மக்களின் தேவைகளுக்கு தொடர்ந்தும் பதிலளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா ஆகியோரை நேற்று சந்தித்துள்ளார்.