மில்கோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

Mayoorikka
2 years ago
மில்கோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

மில்கோ நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்படாதென அந்நிறுவனத்தின் தலைவர் ரேனுக பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மில்கோ நிறுவனமும் பால்மா உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. இதன்படி ஏப்ரல் முதலாம் திகதி முதல் இப்பால்மா சந்தைகளுக்கு விநியோகிக்கப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். நாட்டில் பால்மாக்களின் விலைகள் அதிகரித்திருந்தாலும், மில்கோ நிறுவனம் விலை அதிகரிப்புக்களை செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.