காதலியைக் கொலை செய்து ஆற்றில் வீசிய காதலன் கைது!

Prathees
2 years ago
காதலியைக் கொலை செய்து  ஆற்றில் வீசிய காதலன் கைது!

கடந்த 16ஆம் திகதி கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டில் வைத்து 
காதலியை படுகொலை செய்த காதலன்,  சடலத்தை காரில் எடுத்துச் சென்று வெல்லம்பிட்டிய, கொஹிலவத்தை பிரதேசத்திலுள்ள களனி ஆற்றில் வீசியுள்ளார்.

இது தொடர்பில் பெம்முல்ல பொலிஸார் நேற்று (21ஆம் திகதி) கம்பஹா நீதவான் மஞ்சுள கருணாரத்னவிடம் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய சேடவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ். நதீஷா சந்தீபனி (வயது 22) என்ற யுவதி என பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

சந்தேகநபருக்கும், உயிரிழந்தவருக்கும் சுமார் 5 வருடங்களாக தொடர்பு உள்ளதாகவும் சந்தேக நபர் இறந்தவரின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

சந்தேகநபர் கடந்த 16ஆம் திகதி வெல்லம்பிட்டிய சேதாவத்தை வீட்டில் இருந்து தனது காதலியை கம்பஹா தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும், இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது சந்தேகநபர் தனது காதலியை கொலைசெய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தனது காதலியின் சடலத்தை காரில் கொண்டு சென்று வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை பிரதேசத்தில் களனி ஆற்றில் வீசியுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி சடலம் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

சடலம் தற்போது பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மகளைக் காணவில்லை என பெற்றோர் வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற போது சந்தேக நபர் தனது பெற்றோருடன் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

யுவதி கொல்லப்பட்ட இடத்தை நேற்று (2) பிற்பகல் ஆய்வு செய்தனர்.

சம்பவம் தொடரத்பாக வெல்லம்பிட்டிய மற்றும் பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.