இந்தியாவில் இருந்து மேலும் ஒரு பில்லியன் டாலர்? நிதியுதவி இலங்கைக்கு கிட்டுமா?
#SriLanka
#India
#Dollar
Mugunthan Mugunthan
2 years ago
அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இந்தியாவிடம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் இரண்டு தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 2020 முதல் இன்று வரை, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.
இதனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிதக்க அனுமதிக்கப்பட்டு, அதனால் கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.
இன்று அதன் மதிப்பு டாலருக்கு நிகரான 300ஐ நெருங்கியுள்ளதாக நிதிச் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.