பண்டிகைக் காலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் சலுகை விலையில்

#SriLanka #Coconut #prices
பண்டிகைக் காலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் சலுகை விலையில்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக மக்களுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் தென்னை கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணம் வழங்கி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவிக்கையில்.

தென்னை அபிவிருத்திச் சபையின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிலாபம் கரவிடகராய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.