மொஸ்கோவுக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

Prathees
2 years ago
மொஸ்கோவுக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இலங்கைக்கும் ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் நேற்று (28) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போரின் காரணமாக ரஷ்யா சில சர்வதேச நிதி மற்றும் விமானக் காப்பீட்டுக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறது.

இந்த காரணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரஷ்யாவுக்கான விமானங்களை நேரடியாக பாதிக்கின்றன.

இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறு அறிவித்தல் வரை மொஸ்கோவுக்கான விமானங்கள் இயக்கப்படாது.

தவிர்க்க முடியாத காரணங்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு விமான நிறுவனம் வருந்துகிறது.

ரஷ்யாவின் நிலைமையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கண்காணித்து வருகிறது

நிலைமை சீரடைந்தவுடன் மீண்டும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.