நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே நோக்கம் -விமல்
Prabha Praneetha
2 years ago
இன்றைய தேவை ஜனாதிபதி பதவி விலகுவதல்ல நிதியமைச்சரை நீக்குவதே என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேரலை விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதிய எதிர்க்கட்சி குழுவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதே தமது நோக்கம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.