காரணமின்றி எரியும் வாகனங்கள் - இன்னும் இரண்டு இடங்களில் எரிகிறது

#SriLanka
காரணமின்றி எரியும் வாகனங்கள் - இன்னும் இரண்டு இடங்களில் எரிகிறது

கொழும்பு சேதாவத்தை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

எனினும், சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரியால் தீயை கட்டுப்படுத்த முடிந்தது.

இதேவேளை, வாத்துவ - மொரந்துடுவ வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றிருந்த நிலையில், அப்போது தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.