IMF அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

#SriLanka #Basil Rajapaksa #Parliament
IMF அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தின் பிரிவு 4 இன் கீழ் 95 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கு வழிவகுத்த காரணிகள் மற்றும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான முன்மொழிவுகள் ஆகியவை இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.