மாநில அமைச்சர் சன்னா, மருந்துகளைப் பெற உலக வங்கியின் உதவியை நாடுகிறார்

#SriLanka #drugs #Minister
மாநில அமைச்சர் சன்னா, மருந்துகளைப் பெற உலக வங்கியின் உதவியை நாடுகிறார்

மாநில மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம், உலக வங்கி மருந்துகளை தொடர்ந்து கொள்முதல் செய்வதற்கு உலக வங்கிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கையர்களுக்கு தொடர்ந்தும் மருந்துப் பொருட்களை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமணவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் லின் ஷெர்பேர்ன் பென்ஸ் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழுவினால் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவை மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் அதிகூடிய முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், கூடிய விரைவில் மருந்துகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் திருமதி பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தடுப்பூசி திட்டம் வெற்றியடைந்ததை பிராந்திய பணிப்பாளர் பாராட்டினார்.

இதேவேளை, Pfizer தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கி இலங்கைக்கு வழங்கிய நிதியுதவிக்கு பிராந்திய பணிப்பாளருக்கு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.