இந்திய நிதியில் மருந்து இறக்குமதி
Mayoorikka
2 years ago
மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்திய நிதியுதவியின் கீழ் 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளர்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அந்நிய செலாவணி இல்லாத நிலையிலும், நாட்டில் சுகாதார சேவையை சிறந்த முறையில் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.