அதிகரிக்கும் மின்வெட்டு மணித்தியாலங்கள் - ஒவ்வொரு செயற்பாடுகளையும் இழந்துவரும் இலங்கை
Nila
2 years ago
இருளில் மூழ்கும் இலங்கையில் ஒவ்வொரு செயற்பாடாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அந்தவகையில், மின்வெட்டு காரணமாக பல தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் விஷேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தொடர் மின்வெட்டு காரணமாக 3ஜி மற்றும் 4ஜி டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் அமைப்புகள் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.