வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் தனியார் பேருந்துகள் நிறுத்தம்
Prathees
2 years ago
எரிபொருள் நெருக்கடி தொடருமானால் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர் தனியார் பஸ்கள் சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
நேற்று ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்சமயம் 25% தனியார் பேருந்துகளே இயங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் எரிபொருள் இல்லாவிட்டால் பேருந்து தொழில் தொடர முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தனியார் பேருந்து தொழில் தொடர்பில்இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தவித சலுகைக் கொள்கையையும் பின்பற்றுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.