அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் கைது

Prabha Praneetha
2 years ago
அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளனர்.

மூன்று மீனவர்களையும் படகையும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் , மீனவர்களை நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.