மருந்துகளின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை

Mayoorikka
2 years ago
மருந்துகளின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை

மருந்துகளின் விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு ஔடத இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.