இலங்கை பொருளாதார நெருக்கடி: கைக்குழந்தையோடு தனுஷ்கோடிக்கு சென்ற தமிழ்க் குடும்பம்

Prathees
2 years ago
இலங்கை பொருளாதார நெருக்கடி: கைக்குழந்தையோடு தனுஷ்கோடிக்கு சென்ற தமிழ்க் குடும்பம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவுஇ அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 16 தமிழர்கள் கடந்த மாதம் தமிழகத்திற்கு அகதிகளாக சென்று மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டரை வயது சிறுவனுடன் ஒரு குடும்பத்தை சேர்ந்த மேலும் நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்குச் சென்றுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10), கிஷாந்தன் - ரஞ்சிதாவின் இரண்டரை வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஒரு பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்து இறங்கினர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் பொலிஸார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் பொலிசார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின் நான்கு இலங்கை தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மெரைன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.