உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் கைதானோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
Mayoorikka
3 years ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 735 நபர்களில் 196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
81 நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 493 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



