உகாண்டாவிற்கு மூன்று விமானங்களில் எடுத்துச்செல்லப்பட்ட டொலர்கள்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுப்பு

ராஜபக்சக்களின் சொத்துக்கள் அனைத்தும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு மூன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் மூலம் அச்சிடப்பட்ட பொருட்களாக டொலர் இலங்கையிலிருந்து உகாண்டாவிற்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் திருப்பதிக்கு பயணித்த தனியார் ஜெட் விமானம் குறித்த அச்சிடப்பட்ட பொருட்கள் உகண்டாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இத்தாலியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது
பிப்ரவரி 2021 இல், கொழும்பில் இருந்து உகாண்டாவிற்கு 102 அச்சிடப்பட்ட பொருட்களை அனுப்புவதற்கான ஆர்டரை விமான நிறுவனம் பெற்றதாக தெரிவித்துள்ளது.
இது முழுக்க முழுக்க வணிக ரீதியிலான ஆர்டர் என்றும், இது விமான நிறுவனத்திற்கும் நாட்டுக்கும் வெளிநாட்டு வருவாயை வழங்கியதாகவும் நிறுவனம் கூறுகிறது.
வணிக நோக்கங்களுக்காக மட்டுமே சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.



