பிரதமர் பதவி விலகாவிட்டால், அவர் வெளியேற்றப்படுவார்
Mayoorikka
3 years ago

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால், 40 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளது.
பிரதமரையும் அமைச்சரவையையும் நீக்கிவிட்டு இடைக்கால அரசு அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
இது தொடர்பில் சுயேச்சைக் குழு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து இரு தரப்பும் தற்போது கலந்துரையாடி வருகின்றன.



