இந்தியா வழங்கிய அரிசி சதொச விற்பனை நிலையங்களில்: ஒரு நபருக்கு 5 கிலோ மட்டுமே.

Prathees
2 years ago
இந்தியா வழங்கிய அரிசி சதொச விற்பனை நிலையங்களில்: ஒரு நபருக்கு 5 கிலோ  மட்டுமே.

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினை 145 ரூபாயும்  சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் சதொச ஊடக பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.