19 ஆவது அரசியலமைப்பை திருத்தங்களுடன் அமுல்படுத்த அனுமதி
#SriLanka
#Parliament
#Mahinda Rajapaksa
Prasu
2 years ago
19ஆவது அரசியலமைப்பை தேவையான திருத்தங்கள் மற்றும் காலத்திற்கு ஏற்ற திருத்தங்களுடன் அமுல்படுத்துவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த முன்மொழிவிற்கு இன்று (25) பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் கூடிய போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இம்முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.