பிரதமர் பதவி விலகக் கூடாது என பொஹொட்டு மன்றம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

#SriLanka #Mahinda Rajapaksa #Prime Minister
பிரதமர் பதவி விலகக் கூடாது என பொஹொட்டு மன்றம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் மன்றத்தில் இன்று (26) காலை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அலரிமாளிகையில் இன்று காலை நடைபெற்ற பிரதமர் மற்றும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மன்றத்தினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த பிரேரணையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அறிவிக்க மாகாண சபை உறுப்பினர்கள் மன்றம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என மாகாண சபை உறுப்பினர்கள் மன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி பாராளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக சுதந்திரமாக செயற்படுவது நெறிமுறைக்கு புறம்பானது எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையான 69 இலட்சம் மக்கள் இன்னமும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாகவும் சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் சிறுபான்மைக் குழுவொன்று மௌனம் சாதித்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அரச எதிர்ப்பு அரசியல் அமைப்புகளினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாட்டை வழிநடத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாவிட்டால் இன்று இவ்வாறான போராட்டங்களை நடத்துவதற்கான சூழல் உருவாகியிருக்காது என்றும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

இந்நிகழ்வில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர் மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.