கிருமி நாசினி இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளுடனான திட்டம் இரத்து

Mayoorikka
2 years ago
கிருமி நாசினி இறக்குமதி செய்வதற்கான  கட்டுப்பாடுகளுடனான திட்டம் இரத்து

பூச்சிக் கொல்லிகள், களை நாசினிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளுடனான திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ஜானக வகும்புர தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் நேற்று முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பூச்சிக் கொல்லிகள், களை நாசினிகள் மற்றும் பூஞ்சைக் கொல்லிகளை பதிவாளரால் அங்கிகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்ய முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.