எரிபொருளுக்காக மேலும் 200 மில்லியன் டாலர்கள் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்!

Mayoorikka
2 years ago
எரிபொருளுக்காக மேலும் 200 மில்லியன் டாலர்கள் கடன் வழங்க இந்தியா ஒப்புதல்!

எரிபொருளுக்காக மேலும் 200 மில்லியன் டாலர் கடன் வழங்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும், எரிபொருள் இறக்குமதிக்காக மேலும் 500 மில்லியன் டொலர் கடனாகக் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 எரிபொருளுக்கு இந்தியா தற்போது கடன் கொடுத்து வரும் டாலர் கடன் தற்போது குறைந்து வருகிறது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை பெறும் எரிபொருளின் எதிர்பார்க்கப்படும் பெறுமதி 1200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

200 மில்லியன் டொலர் பெறுமதியான நான்கு எரிபொருள் தாங்கிகள் இம்மாதம் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.