நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

Nila
3 years ago
நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டையும், மக்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள். வீடுகளில் இருங்கள். தேவையற்ற வகையில் வெளியில் வரவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்த வன்முறையை கட்டுப்படுத்த உதவிய அனைத்து மக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நாடு முழுமையாக வழமைக்கு திரும்பிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொது சொத்துக்களின் மீது கை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!