இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் அமெரிக்க தூதர் திடீர் சந்திப்பு!

Nila
2 years ago
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் அமெரிக்க தூதர் திடீர் சந்திப்பு!

இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் பல்வேறு நாடுகளும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சற்றுமுன் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சுங் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அவசியமானது. நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கான உள்ளூர் மற்றும் பலதரப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் வழிகளை ஆராய்ந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.