நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் - மத்திய வங்கி ஆளுநர்

Reha
2 years ago
நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் - மத்திய வங்கி ஆளுநர்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயல்படவில்லை என்றும், இன்று பாராளுமன்றத்தில் பிரதமரோ, நிதியமைச்சரோ, செயலிழந்த நிறைவேற்று ஜனாதிபதியோ இல்லாத ஒரு செயலிழந்த நிலை காணப்படுவதாகத் தெரிவித்த அவர், ஸ்திரமான ஆட்சி முறையை விரைவில் நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.