மடி கணினி எரிந்து விட்டது: கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முடியாது! அறிவித்த உறுப்பினர்கள்

Mayoorikka
2 years ago
மடி கணினி எரிந்து விட்டது: கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முடியாது! அறிவித்த உறுப்பினர்கள்

கட்சித் தலைவர்களின் இன்றைய கூட்டம், சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

எனினும், அதில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை என அறியமுடிகின்றது.

தங்களுடைய வீடுகள் கொளுத்தப்பட்டமையால், கணினி மற்றும் மடி கணினி ஆகியன தீயில் கருகிவிட்டன.

ஆதலால், அந்த சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.