நாட்டின் சில பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு

Prabha Praneetha
2 years ago
நாட்டின் சில பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நான்கு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சி களுத்துறை பாலிந்தநுவர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.