'ஐபாட் டச்' உற்பத்தியை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்
#technology
#Article
#today
Mugunthan Mugunthan
4 years ago
ஆப்பிள் நிறுவனமானது ஐபாட் டச்சின் விற்பனையை முற்றிலும் நிறுத்துகிறது.
2001 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி ஆப்பிள் நிறுவனமானது ஐபாட் டச்-யை அறிமுகப்படுத்தியது. எம்பி3 வடிவத்தில் ஆயிரம் பாடல்களை சேமிக்கும் திறன் கொண்ட ஐபாட்-டச், தரமான இசையை கேட்கும் வகையிலும், பாக்கெட் வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி அழைப்புகளை தவிர, ஐ-மேசஜ் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு ஐபாட் டச்சினை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஐபாட் டச் மட்டுமே விற்கப்படும் என்றும் புதிதாக உற்பத்தி செய்யப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே