அனைத்து அத்தியாவசியமற்ற செயற்திட்டங்களும் நிறுத்தப்பட வேண்டும்: ஹர்ஷ டி சில்வா
Mayoorikka
2 years ago
நாட்டில் முன்னெடுக்கப்படும் அனைத்து அத்தியாவசியமற்ற செயற்திட்டங்களும் நிறுத்தப்பட்டு, அதற்கென செலவிடப்படும் பணத்தை குறுகிய காலத்தில் சமூக பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தெஹிவளையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. வறுமையில் இருந்து விடுபடாமல் வாழ முடியுமா என்பதுதான் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.