இலங்கையில் உள்ள பிலிப்பைன்ஸ் குடிமக்களை திருப்பி அனுப்புமாறு உத்தரவு
Mugunthan Mugunthan
2 years ago
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு பிலிப்பைன்ஸ் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டிடம் பணம் உள்ளது. எனவே எமது நாட்டவர்களை திருப்பி அழைத்து செல்லுங்கள் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை, அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் தியோடோரோ லோக்சின் உத்தரவிட்டார்.