உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இரண்டரை வயது இலங்கைச் சிறுமி!

Nila
2 years ago
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இரண்டரை வயது இலங்கைச் சிறுமி!

இரண்டரை வயது இலங்கைச் சிறுமி உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை அல் மினன் வீதி, ஸர்ஜுன் அக்மல் - பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் மகளான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலைநகரங்களை இரண்டு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் (international book of world record) தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய சிறுமியை பிரதேச மக்கள் பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது இரண்டு வயதில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த மின்ஹத் லமி என்ற இந்த சிறுமி மருதமுனை வரலாற்றில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முதலாவது சாதனை சிறுமியாவார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!