கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைவு
Kanimoli
2 years ago
கடந்த மே மாதம் 09ஆம் திகதி அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட மஹிந்த கஹந்தகம காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்களில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.
இதேவேளை, மஹிந்த கஹந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.