குமார் சங்ககார பொதுமக்களுடன் வரிசையில் - எளிமையின் அடையாளம் என மக்கள் புகழாரம்

Kanimoli
2 years ago
 குமார் சங்ககார பொதுமக்களுடன் வரிசையில் - எளிமையின் அடையாளம் என மக்கள் புகழாரம்

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கையின் கிரிகெட் பிரபலம் குமார் சங்ககார பொதுமக்களுடன் வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குமார் சங்ககார  அங்கு காத்திருக்கையில் ஏன் வரிசையில் இருக்கிறீர்கள், உள்ளே செல்லுங்கள் என 10 அதிகாரிகளுக்கு மேல் வந்து அவர் அழைத்துள்ளனர்.

இதன்போது பிரச்சினை இல்லை, இன்னும் கொஞ்சம் தூரம் தானே என அவர்களிடம் குமார சங்கக்கார பதிலளித்தாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பிரபலமாக இருந்தாலும் தன்னடக்கத்தை கொண்ட குமார சங்கக்காரவின் குணம் மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றது.