பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

#France #MonkeyPox
Prasu
4 years ago
பிரான்ஸ் நாட்டில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி

உலகளவில் குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் 22 முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறுகிறது. இது தொடர்பாக பிரெஞ்சு சுகாதார அமைப்பு கூறும்போது, இதுபோன்ற நோய்த்தொற்றை எதிர்பார்க்கவில்லை என்றும் நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் கூறியது.

மேலும், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுநர்கள் உட்பட, அனைவரும் தடுப்பூசி போடுமாறு பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4