எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை

Reha
2 years ago
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் - அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை

எரிபொருள் நெருக்கடிக்கு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும், பணியாளர்களும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அல்லர் எனவே , எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களைக் கோரியுள்ளார்.

எதிர்வரும் சில நாட்களுக்கு வீதியை இடைமறித்து, எந்தவொரு இடத்திலேனும் குழப்பநிலையை ஏற்படுத்தினால், அதாவது எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களைத் தாக்கினால், அன்றைய தினம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலைக் கொள்வனவு செய்ய புதிதாக 2 நிறுவனங்களும், விமான எரிபொருளை வழங்க மற்றுமொரு நிறுவனமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின்மூலம், தற்போது நாளொன்றுக்கு 350 மெற்றிக் டன் லீற்றர் பெற்றோல் உற்பத்தி செய்யப்படுகின்றது.

எரிபொருள் சுத்திகரிப்பின் மூலம் நாளொன்றுக்கு 600 மெற்றிக் டன் டீசல் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அதேநேரம், நாட்டை வந்தடைந்துள்ள 40,000 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலில் உள்ள டீசலின் தரப்பரிசோதனை முடிவடைந்த பின்னர், இன்று மாலை முதல் அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் 40,000 மெற்றிக் டொன் டீசல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!