கனடாவில் பட்டப்பகலில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்

#Women #Murder #Canada
Prasu
2 years ago
கனடாவில் பட்டப்பகலில் உயிரோடு எரிக்கப்பட்ட பெண்

டொரன்டோவில் பேருந்து ஒன்றில் பட்டப்பகலில் இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சையில் இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என டொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார், கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி பகல் சுமார் 12.30 மணியளவில் கிப்லிங் அவென்யூ மற்றும் டன்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதிக்கு டொரன்டோ  பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். 

இளம் பெண் ஒருவர் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் பெண் மீது திரவப் பொருளை ஊற்றி பற்றவைத்ததாகவும், இதனால் தீ மூண்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் குறித்த பெண்ணுக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த பெண் சன்னிபுரூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய தற்போதைய நிலை குறித்து எந்த தகவலும் தற்போது இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!