இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ள 10,000 பேருந்துகள்
Prabha Praneetha
2 years ago
தனியார் பேருந்துகளுக்கு, இ.போ.ச டிப்போக்களில் உரிய முறையில் எரிபொருளை வழங்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதால், இன்று தொடக்கம் 50 சதவீத தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலம் நாளாந்தம் 800,000 லீற்றர் டீசல் வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் வழங்கப்பட்ட இணக்கப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.