வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழப்பு

Prabha Praneetha
2 years ago
வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழப்பு

இந்தியா – அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 62ஆக உயர்வடைந்துள்ளது.

மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்பு பணி தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.