புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு சஜித் சவால்!
Mayoorikka
2 years ago
புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உடனடியாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
“உடனடியாக பொது வாக்கெடுப்புக்கு மக்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த அணியை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள். நாட்டின் பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்